Sunday, October 27, 2013

தனியாக பேசும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே!! --> உலகம் பைத்தியக்காரன் என்றது

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எழுதுகிறேன் .எப்படியும் ஒரு எட்டு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன் .எதற்கு தமிழில் நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நீங்கள் என்னை கேட்கலாம் .அதற்கும் பதிலை சொல்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டான். :( ஏன் என்றால் அவன் காதலித்த பெண் அவனை விட்டு சென்று விட்டால் .அவன் இறுதி சடங்கிற்கு சென்று இருந்த பொழுது அவன் அம்மா என்னை பிடித்து கொண்டு அழுதது என் மனதை முழுமையாக மாற்றியது . நான் நேசித்த பெண் என்னை விட்டு சென்ற பிறகு நானும் இதே முடிவினை எடுத்தேன் அனால் அதிலும் எனக்கு தோல்வி தான் மிஞ்சியது .இறுதியில் ஒரு நல்ல வைதியரை பார்த்து treatment எடுத்து கொண்டு இருக்கிறேன் .விளைவுகள் முகமாற்றம்,முடி கொட்டுதல் பைத்தியம் பிடித்தல் போன்றவை.

இந்த உலகில் இருக்கும் தமிழ் படிக்க தெரிந்த பெண்களை கேட்டு கொளிறேன், ஒரு பையனை காதலித்து கல்யாணம் செய்யும் அளவுக்கு தைரியம் இருந்தால் மட்டும் காதலிக்கவும் இல்லையென்றால் காதல் வெளிபடுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். அவன் இறந்த பிறகு ஒரு மாலை குட வெக்க அவள் வரவில்லை .அவளுடைய போலியான காதலால் ஒரு உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது .

No comments:

Post a Comment